தமிழகத்தில் வனப்பரப்பை 23.7 சதவிகித்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.


Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!




அதன் அடிப்படையில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை இணையதளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8 வது தளம், சைதாப்பேட்டை ,சென்னை - 600 015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Bigg Boss 7: பரபரப்பு எகிறுதே... பிக் பாஸில் என்ட்ரி தரும் வனிதா மகள் ஜோவிகா? அம்மாவை ஓவர்டேக் செய்வாரா?




இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்ற திட்டம் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  மயிலாடுதுறை அருகே நீடூரில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் தனியார் கல்லூரி தோட்டத்தில் இன்று 800 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நட்டு வைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள தீன் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் கல்லூரி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. 


8 Years Of Kuttram Kadithal: குழந்தைகளின் மொழியில் ஒரு கதை... 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் குற்றம் கடிதல்..!




இதில், தேக்கு, மகாகனி, வேங்கன், மா, பலா, புங்கன், வேம்பு போன்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கும், மண்ணின் தரத்துக்கும் உகந்த மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் மரக்கன்றுகளை வளர்ப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


WOW MADURAI: அமைச்சர் பங்கேற்றும் பாதியிலேயே ரத்தான WOW MADURAI நிகழ்ச்சி.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!




தொடர்ந்து கல்லூரியில் இருந்து மாணவிகள் பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியே மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.