வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடந்தது. இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கொலை செய்யப்பட்ட வாரிசுதாரர்களுக்கு கீழ் விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை, 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
உலக நீரிழிவு நோய் தின பேரணி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மருதுதுரை மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன் கலந்து கொண்டனர். மருத்துவத்துறை பேராசிரியர்கள் பராந்தகன், கண்ணன், உதவி மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து நடந்த கருத்தரங்க கூட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் கால் பாதுகாப்பு குறித்து பேராசிரியர் மருதுதுரை, பேராசிரியர் பிரபுசங்கர், உரையாற்றினர். திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகி விவேக்சுந்தரம், நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து பேசினர். ஜீவானந்தம் நன்றி கூறினார்.