தஞ்சாவூர்: திருச்சி, தஞ்சாவூரில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 26, 27ம் தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிறார் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், ஆம்னி பேருந்து நிலையத்தை இன்று பார்வையிட்ட பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி காலை வருகிறார். திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மறுநாள் 27ம் தேதி காலை திருச்சியில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்கமம் என்கிற கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ. 140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார். மேலும் வல்லம் குவாரி சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் சூட்டவுள்ளார்.
தஞ்சாவூரில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
என்.நாகராஜன் | 24 Jul 2023 03:49 PM (IST)
டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.
அமைச்சர் கே.என்.நேரு
NEXT PREV
Published at: 24 Jul 2023 03:49 PM (IST)