நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள்  2 நாள் வேலை நிறுத்த போராட்டம். பஞ்சு விலை ஏற்றத்தின் காரணமாக கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். விவசாயிகள் இதனால் பயன் அடைந்தாலும், விவசாயிகளிடமிருந்து சந்தைக்கு வரும் பஞ்சின் விலைக்கும் சந்தையிலிருந்து ஜவுளி வியாபாரிகளுக்கு கொடுக்கும் விலைக்கும்  ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் விலை அதிகமாக உள்ளது. அதன் காரணமாக கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி மே16, 17 ஆகிய தேதிகளில் அடையாள வேலைநிறுத்தம். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கருவூர் வீவிங் மற்றும் நிட்டிங்  ஓனர் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம், ஆகிய  அமைப்புகள் இணைந்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள்.




நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவைக்கேற்ற நூல் கிடைப்பதில்லை. அதேசமயம் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும். அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், தற்போது உள்ள சூழலில்  நாள்தோறும் நூல் விலை ஏறி வருவதால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




நூல் விலையை குறைக்க வலியுறுத்தி   மே 16 மற்றும் 17 நாட்களில் கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு  எடுக்கப்பட்டது.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800  நிறுவனங்கள்,  150 நூல் வினியோகஸ்தர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  சுமார் 2 1/2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சுமார் 100 கோடி அளவில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கின்றனர்