தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சி ஆரம்பிக்கும்போது அதன் தலைவர்கள் கொள்கைகளை வெளியிடுவர். ஆனால் தவெக சற்று வித்தியாசமாக கொள்கைகளை வெளியிட்டுள்ளது. 


தவெகவின் கொள்கைகள் என்ன?


இதுகுறித்து விஜய் கூறுகையில்,  “ஒரு கட்சிக்கு ரொம்ப முக்கியம் கொள்கைகளும், தொண்டர்களும். ஒரு கட்சிக்கு கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தொண்டர்களும் அவ்வளவு முக்கியம். நானும் அந்த தொண்டர்களில் ஒருவன்தான். கொள்கைகளை தலைவர்தான் அறிவிக்க வேண்டும் என அவசியம் இல்லை என தெரிவித்தார். 


இதையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் சம்பத்குமார் அக்கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும். பிறப்பில் எல்லா உயிர்களும் சமம். மதம், சாதி, இனம், பாலின அடையாளம் இல்லாமல் எல்லோர்க்கும் எல்லாம் என்பதை உருவாக்குவதே தவெகவின் கொள்கை. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக்கொள்கையை தவெக பின்பற்றும். அதில் தமிழே ஆட்சி மொழி. 


ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவது தவெகவின் கொள்கை. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சமமாக நடத்துவதே கொள்கை. அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி என்பது தவெகவின் கொள்கை” எனத் தெரிவித்தார். 


மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்ற தனிமனித அடையாள வேறுபாடுகளை களைதலே தங்களுடைய கொள்கை என்றும் தவெக தெரிவித்துள்ளது.


அரசியலுக்கு வந்தது ஏன்?


அரசியலுக்கு வந்ததன் காரணத்தை சொன்ன விஜய், "அரசியல் எதற்கு நடித்தோமா நான்கு காசு பார்த்தோமா எனதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன்.  நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம் இல்லையா? நம்மை வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா? என நினைத்தேன், அதனால்தான் அரசியலுக்கு வந்தேன்.


இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது அந்த கலரை பூசுவது என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது. இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது, அந்த கலரை பூசுவது என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது, திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழகத்தின் இரண்டு கண்கள்" என்றார்.