தமிழ்நாடு : 



  • தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு முனைப்புடன் உள்ளது : தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்  கடிதம் 

  • அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் 

  • பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சென்னை ஐஐடி மாணவி : 3 முறை தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி 

  • தமிழ்நாட்டில் 105 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது பெட்ரோல் விலை 

  • சென்னையில் 2021 ஆகஸ்ட் 19 முதல் 2022 மார்ச் 26 வரை  22, 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

  • சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

  • திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

  • தமிழ்நாட்டில் 5 இடங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். 


இந்தியா : 



  • மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்களின் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளதாக கூறினார்.

  • 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியது.

  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,421 ஆக குறைந்துள்ளது. 

  • ஆந்திரா: திருப்பதி அருகே பாகார்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 


உலகம் : 



  • 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

  • மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தமாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்ததாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர். 

  • ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் கருத்துக்கு ரஷ்யா கண்டனம் 


விளையாட்டு : 



  • சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 

  • உலககோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

  • மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண