TN Weather Update: நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


26.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 


27.02.2023 முதல் 01.03.2023 வரை: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்  லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். 


02.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை. 


பனிமூட்டம்:


வெயில் காலம் தொடக்கத்திலும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம் இருக்கிறது. நண்பகலில் வெயில் தாக்கமும், மாலையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னை போலவே பிற மாவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனி நிலவி வருகிறது. நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலையில் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


அடுத்து வரும் சில தினங்களுக்கு பனிமூட்டம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இதே போன்ற சூழல்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலை மற்றும் மதிய வேலையில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகமாக இருக்கும் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வெயிலில் செல்லும் மக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க


Balakot Airstrikes: ஆபரேஷன் பந்தர்.. அதிகாலையில் அதிரடி.. பாலகோட் தாக்குதல் பற்றி அறிந்திராத தகவல்கள்..!


Thirumavalavan: ”சுட்டு தள்ளுங்க” என அண்ணாமலை ஆவேசம்.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்.பி. கோரிக்கை