TN Rain News LIVE: 'சென்னையில் 300 நிவாரண முகாம்கள்' - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
TN Rain News LIVE Updates: சென்னை உட்ப்ட தமிழ்நாடு முழுவதும் மழை தொடர்பான தகவல்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
"சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது;
20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லை; கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சுமார் 1500 அழைப்புகள் வந்துள்ளன, அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன" :
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
“சென்னையில் சராசரியாக 4.6 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய நீர் அகற்றப்படுகிறது. சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை பதிவு! அயப்பாக்கத்தில், கடந்த ஒரு மணி நேரத்தில் (இன்று காலை 7-8 மணி) 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது!
சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேக்கம்; எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை! -சென்னை மாநகராட்சி தகவல்
மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் - பிரேமலதா
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 15.10.2024
வெங்காயம் 60/50/40
தக்காளி 120/110/80
உருளை 36/35/30
சின்ன வெங்காயம் 80/60/50
ஊட்டி கேரட்
70/60/50
கர்நாடக கேரட் 50/40
பீன்ஸ் 230/200/
பீட்ரூட். ஊட்டி 70/50
கர்நாடக பீட்ரூட் 40/30
சவ் சவ் 40/35
முள்ளங்கி 40/30
முட்டை கோஸ் 30/27
வெண்டைக்காய் 60/50
உஜாலா கத்திரிக்காய்
50/40
வரி கத்திரி 30/25
காராமணி 80/70
பாவக்காய் 50/40
புடலங்காய் 50/40
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 70/60
முருங்ககாய் 70/60
சேமகிழங்கு 50/30
காலிபிளவர் 35/30
வெள்ளரிக்காய் 15/10
பச்சை மிளகாய் 90/80
பட்டாணி 250/180
இஞ்சி 180/160/150
பூண்டு 350/300/260
அவரைக்காய் 100/90
மஞ்சள் பூசணி 15/13
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 45/35
எலுமிச்சை 120/110
நூக்கள் 60/50
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 50/40
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 30/25
வாழைப்பூ 30/25
குடைமிளகாய் /70/60
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 10
புதினா .5
கருவேப்பிலை 30
கீரை வகைகள் 15
மாங்காய் 90/50
தேங்காய் 50/47
TN Rain News LIVE: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது
தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்து காவல்துறை இது தொடர்பான புகார்களுக்கு : South & East 044-23452362 மற்றும் North & West 044-23452330
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 105 ஏரிகள் 75%-100% , 188 ஏரிகள் 50%-75%, 275 ஏரிகள் 25%-50%, 315 ஏரிகள் 25% கீழ் நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடியாக உயர்வு! ஏரியின் நீர்மட்டம் 13.23 அடியாக உள்ளது. தற்போது சென்னை குடிநீருக்காக 109 கன அடி நீர் கொண்டு செல்லப்படுகிறது.
கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் தீலிப் குமார், வீட்டின் அருகாமையில் வீட்டிலிருந்து மின் கம்பத்துக்கு செல்லும் மின் ஒயர் அருந்து கீழே விழுந்துள்ளது, இதனை அறியாமல் சென்ற வாலிபர் மின் ஒயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை
செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில், 13.23 அடியாக நீர் உள்ளது. மொத்தம் 1.2 டிஎம்சி நீர் உள்ளது .
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 260 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து குடிநீர் உள்ளிட்ட தேவைக்காக 134 கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு
Background
- சென்னையில் இடி, மின்னலுடன் சில மணி நேரங்களில் 5 செ.மீ., அளவுக்கு கொட்டிய கனமழை - தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் அகற்றம்
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு இடையே துணை முதலமைச்சர் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு - கடந்தாண்டு போல் பாதிப்பு இருக்காது என உறுதி
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறுகிறது - கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை
- சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மழை முன்னெச்சரிக்கையாக விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- கோவையில் கனமழை காரணமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- கனமழை எச்சரிக்கை காரணமாக கடை வீதிகளில் குவிந்த மக்கள் - பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்
- அல்ஜீரிய அதிபருடன் வர்த்தகம், முதலீடு பற்றி குடியசு தலைவர் திரவுபதி முர்மு ஆலோசனை
- கனடாவின் தூதரக அதிகாரிகள் 6 பேர வெளியேற்றி மத்திய அரசு உத்தரவு - அந்நாட்டு அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் கருத்து
- காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் ஆண்டு இறுதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மருத்துவமனையில் அனுமதி
- வியாழன் கிரகத்தின் நிலவுக்கு ”யுரோப்பா கிளிப்பர்” விண்கலத்தை அனுப்பிய நாசா
- இஸ்ரேல் மீதான தாக்குதல் - லெபனானுக்கு ஐக்கிய அமீரகம் ஆதரவு
- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு அறிவிப்பு
- மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்ட்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து - இந்தியாவின் கனவு தகர்ந்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -