தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற் கொள்கை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.