44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்காக, வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


கடந்த மாதம் அதாவது ஜூலை 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் மாதம், 27-ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.