இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய மணமக்களுக்கு  அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அரசாணையில், 


”முதலாவதாகப் அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும். மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.


இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 04:12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன, இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 ஏழை எளிய இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20.000/- தொகையினை ரூ.50,000/- ஆக உயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் – ரூ. 20,000


மணமகன் ஆடை – ரூ. 1000


மணமகள் ஆடை – ரூ. 2000


திருமணத்திற்கு மணமக்கள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு – ரூ. 2000


மாலை, புஷ்பம் – ரூ.1000


பீரோ-1 -  ரூ. 7800


கட்டில்-1 – ரூ. 7500


மெத்தை – ரூ. 2,200


தலையணை-2 – ரூ. 190


பாய் 1 – ரூ. 180


கைக்கடிகாரம்-2 – ரூ. 2000


மிக்ஸி-1 – ரூ. 1490


பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் – ரூ. 3640


இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர்: அதனை ஏற்று. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும். இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும். உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.