தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 


அப்போது அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை. பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.