கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் தொடங்கிய சோதனையானது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, அலுவலகம், தனலட்சுமி செராமிக்ஸ், அலுவலகம், குடோன் வீடு என ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில்,


 


 




 


கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான "தனலட்சுமி செராமிக்ஸ்" என்ற டைல்ஸ் அலுவலகம், குடோன் மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டனர். இதில் தனலட்சுமி செராமிக்ஸ் என்ற டைல்ஸ் அலுவலகம், குடோன் சோதனை நிறைவு பெற்று அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.


 


 




 



அவருக்கு சொந்தமான வீட்டில் மட்டும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை தொடர்ந்து இரண்டாவது நாளான  கரூர் மாநகர் பகுதியில் புதுப்புது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட தொடங்கியுள்ளனர்.


கரூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில்  வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற அவரின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், குறிப்பாக லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில் என்பவர் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள் அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.




தற்போது தனலட்சுமி செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை உரிமையாளர் பிரகாஷ் என்பவர் வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் என்பவர் அலுவலகம் என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.