பள்ளி  வாகனங்களை ஆண்டாய்வில் ஒட்டுநர்கள் உடற் தகுதி சான்று பெற்று பள்ளி  வாகனங்களை இயக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.


கரூர் மாவட்டம், அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் பள்ளி வாகனங்களை ஆண்டாய்வு மேற்கொண்டார்கள். 


 


 


 




 


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது, கரூர் மாவட்டத்தில் இன்று 89 பள்ளிகளின் 350 வாகனங்கள்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 46 பள்ளி வாகனங்களில் தகுதிசான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்;த ஆய்வில் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி,  தீயணைக்கும் கருவி,  முதலுதவி பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டுப்பட்டது. வாகனங்களில் சி.சி.டி.வி கேமாராக்கள் பொருத்த கட்டாயாமகாக்கப்பட்டது.  அனைத்து பள்ளி பேருந்துகளிலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக சட்டத்தால் நெறிமுறைகளின் படி அனைத்து பேருந்துகளும் உள்ளனவா அவற்றினுடைய ஓட்டுனர்கள் சரியான முறையில் இருக்கிறார்களா,  மேலும், பேருந்தில் அனைத்து வசதிகளும் உதாரணமாக பேருந்தில் ஏறக்கூடிய படியிலிருந்து பொதுவான கட்டமைப்பு உறுதியாக உள்ளதா என்பது முதற்கொண்டு பேருந்துகள் சீராக இயங்கிறதா உள்ளே இருக்கக்கூடிய இருக்கைகள் சரியான முறையில் உள்ளதா மற்றும் அவசர வழி சரியாக இயங்குகிறதா உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பரிசோதனை செய்யப்பட்டு பள்ளி செல்லும் குழந்தைகளும் ஒருவர் கூட பாதிப்பு ஏற்படாத வண்ணம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டாய் மேற்கொள்ளப்படுகிறது. 


 


தொடர்ந்து எந்த விதமான குறைபாடு உள்ள பேருந்தும் சாலையில் செல்ல அனுமதிக்கப்படாது என்பது இந்த ஆய்வின் மேலும் உறுதி செய்யப்படும். இந்த ஒரு ஆண்டாய் மட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் தொடர் ஆய்வு மூலமாகவும் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் தலைமையில் அணியினர் இந்த பாதுகாப்பினை உறுதி செய்வர்கள். என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவான குறைபாடுகள் என்று பார்த்தால் சென்ற ஆண்டு கொரனா முடிந்து வந்த பின்னர் நிறைய பேருந்துகள் இயங்காமல் இருந்தது அப்பொழுது நாம் இன்னும் கவனமாக செயல்பட்டோம் இருந்தாலும் சில வாய்ப்புகள் கொடுத்து அது இயங்குவதற்கு நாம் அனுமதி அளித்தோம்.  ஆனால் இந்த ஓராண்டில் தொடர்ந்து எங்கையும் சில பேருந்துகளில் நாம் பார்க்கும் பொழுது பழைய பேருந்துகளில் நிறைய மாற்றப்பட்ட வண்டிகள் இன்றைய செயல்பாடுகளை பார்க்கின்ற மாதிரி சரியான வழிமுறைகள் படி இல்லை என்றால் அதை மாற்றுவதற்காக உடனடி உத்தரவு போடப்பட்டு இருக்கிறது மற்றும் அவசர வழி முக்கியம் ஏதாவது ஆபத்து ஏற்படும் பொழுது அதை பார்க்க வேண்டும். அது சில நபர்கள் தொழில் குறைபாடு உள்ளது முக்கியமாக தீயணைப்பான் கருவி சரியான காலத்தில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும், முக்கியமாக ஓட்டுநர்கள் சீருடை அணிந்து அவர்கள் சரியான முறையில் இன்று பேருந்து இயக்குவதற்கு நாம் வரவேண்டும் அவர்கள் இந்த ஆய்வுக்கு வரும்பொழுது கூட அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கிறார்கள் என பார்த்து அவர்கள் மீதும் பேருந்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இதன் மூலம் பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து பேருந்துகள் சரியான முறையில் இல்லை என்றாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவித்தால் தொடர்ந்து கல்வி பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படும் என்பதை தெரிந்து கொள்கிறேன்.


 


 




 


அதாவது வயதுவரம்பு கிடையாது வண்டியை இயக்குவதற்கு வயது வரம்பு கிடையாது லைசென்ஸ் புதுப்பதற்கும் லைசென்ஸ் உடன் ஓட்டுவதற்கும் அவர்களது உடல்நிலை தகுதி வேண்டும் குறிப்பாக அவர்களுக்கு பார்வை, கேட்கும் திறன்,  உடல் திறன்,  சர்க்கரை,  ரத்த கொதிப்பு இருக்கிறதா என்பதை உடற் தகுதி ஆய்வு செய்து இருக்க வேண்டும், 70 வயது உள்ளவர்கள் கூட உடல் தகுதியோடு இருந்தால்தான் பேருந்து இயக்குவதற்கு அனுமதி வழங்குவதற்கு அறிவுரை வழங்க வேண்டும். என்னவென்றால் அதிகமான வயது முதிர்ந்தவர்களை இந்த பணியில் அமர்த்த வேண்டாம் என வட்டார போக்குவரத்து தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி வைக்க வேண்டும் சிசிடிவி தொடர் கண்காணிப்பு அந்தப் பள்ளியில் சென்று ஆய்வு செய்யும் பொழுது கண்காணிக்க முடியும், இதனை பள்ளி கல்வித்துறை ஆய்வ செய்து தெளிவு செய்ய வேண்டும் கண்டிப்பாக அனைத்து பேருந்துகளிலும் பொருத்தப்பட்டுள்ளது தொடர்ந்து பள்ளி கல்வித்துறையில் என்ன உறுதி செய்யவேண்டும் இந்த ஆய்வு என்பது ஒரு பகுதிதான், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பு நலன் கருதி  இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர். தெரிவித்துள்ளார்கள். பின்னர் பள்ளி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தீ தடுப்பு ஒத்திகை செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.