தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்)  கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்)  கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும்.

26.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும்.

27.03.2023 மற்றும் 28.03.2023:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான /  மிதமான மழை   பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

அதிகபட்சமாக லக்கூர் (கடலூர்) 8, தொழுதூர் (கடலூர்) 6, மணம்பூண்டி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), வெங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கிளச்செருவை (கடலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 4, வேப்பூர் (கடலூர்), செந்துறை (அரியலூர்), வெள்ளக்கோவில் (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), காட்டுமயிலூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),  கள்ளக்குறிச்சி) தலா 3 மழை பதிவாகியுள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த மழை மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.         

'அமைச்சர் அந்தர் பல்டியா? 2 நாற்காலி, ஒரு மைக் இருந்தால் போதுமா?'- பேரவையில் கொந்தளித்த அமைச்சர் அன்பில்!

5 ஆண்டில் இவ்வளவு தற்கொலைகளா? என்ன நடக்கிறது உயர்கல்வி நிறுவனங்களில்? - மத்திய அமைச்சர் பதிலால் அதிர்ச்சி!