சென்னை மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கக்கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 




இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக தமிழ அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.