✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tamilnadu Rain: ஜூலை 15, 16, தினங்களில் இந்த மாவட்டங்களில் கனமழைதான்! முன்னெச்சரிக்கை மக்களே!

செல்வகுமார்   |  13 Jul 2024 07:37 PM (IST)

TN Rain: வரும் ஜூலை 15, 16, தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை ( கோப்பு படம் )

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும் , எங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறித்து வானிலை மையம் என்ன தெரிவித்துள்ளது என்பது குறித்து காண்போம். 

இன்று இரவு 10 மணிவரை:

இன்று இரவு 10 மணிக்குள் , வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வானிலை குறித்து, வானிலை மையம் விரிவாக தெரிவித்திருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

மேலும் ஜூலை 14 ஆம் தேதியான நாளை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எச்சரிக்கை:

இதையடுத்து, ஜூலை 15 ஆம் தேதி, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிக முன்னெச்சரிக்கையாக இருக்குமாரு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்ததாக ஜூலை 16 ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை:

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் , ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கையில், அடுத்த 5 தினங்களுக்கு வங்க கடலில் காற்றின் வேகமானது அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Published at: 13 Jul 2024 07:37 PM (IST)
Tags: IMD tamilnadu TN Rain TN Weather RAIN @chennai
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Tamilnadu Rain: ஜூலை 15, 16, தினங்களில் இந்த மாவட்டங்களில் கனமழைதான்! முன்னெச்சரிக்கை மக்களே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.