TN Lockdown | 28-ஆம் வரை நீடிக்கும் ஊரடங்கு : 3 வகைகளாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் : எந்த வகை மாவட்டங்களில் என்ன தளர்வுகள்?

கொரோனா வைரஸை தடுப்பதற்காக தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கானது 28/06/2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவிப்பு தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், நோய் பரவல் தாக்கத்தை பொறுத்து மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

கொரோனா வைரஸை தடுப்பதற்காக தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கானது 28/06/2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவிப்பு தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

அதில், நோய் பரவல் தாக்கத்தை பொறுத்து மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

வகை 1 -ல் 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன:

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் 

வகை 2 -ல் 23 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன: 

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் 

வகை 3 -ல் 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன: 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் 

வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கான போக்குவரத்து தளர்வுகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

வகை -1 

இதில்  வகைப்படுத்தப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும்.   

வகை -2 

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வகை -3 

குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள்ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ - பதிவு இல்லாமல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிறார்களுக்கான கண்காணிப்பு/ பராமரிப்பு, சீர்த்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ- பதிவில்லாமல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர். 

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 % இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola