• TNPSC Group 2 Results Exclusive: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாக்கும் தேர்வர்கள்- அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் அரசு ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறது என்றும் தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மேலும் படிக்க



  • UGC NET December Admit Card 2023: நெட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்ட யுஜிசி; பதிவிறக்கம் செய்வது எப்படி?


யுஜிசி நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். 2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வின் யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம்.  இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் படிக்க



  • Edappadi Palanisamy:அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மழை வெள்ள பாதிப்புக்கு காரணம்-  இபிஎஸ் குற்றச்சாட்டு


எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை திருவொற்றியூர் பகுதியில் நலதிட்ட உதவிகள் வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மழை வெள்ள பாதிப்புக்கு காரணம். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் முதல்வருக்கும் அமைச்சர் மா.சுவிற்கு தரலாம். பொய் பேசியதால்தான் திமுக ஆட்சிக்கே வந்திருக்கிறது. உண்மை பேசியிருந்தால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. மேலும் படிக்க



  • TN Rain Alert: அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழை.. முழு விவரம் இதோ..


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  மாலத்தீவு  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்


சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கிற்கு பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு முறை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் படிக்க