• Pongal Gift: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000: யாருக்கெல்லாம்? - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மேலும் படிக்க



  • Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு - வெளியான முக்கிய தகவல்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல் முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே ஏற்கனவே வழங்கி வந்த ஒரு கோடியே 13 லட்சம் பயனர்கள்களுடன் இந்த இரண்டு லட்சம் பேருக்கும் வரும் 10ஆம் தேதி வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க



  • ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை - செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!


கடந்த 2011 - 2016 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போதைய திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.  மேலும் படிக்க



  • மக்களுக்கு சிரமத்த கொடுக்காதீங்க: பணிக்கு வாங்க! போக்குவரத்து ஊழியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை!


காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு அதிகரிப்பு, ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றி தரக்கோரி தொடர்ந்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று சமீபத்தில் நடந்தது. மேலும் படிக்க



  • TN Rain Alert: மழைக்கு ரெடியா இருங்க மக்களே.. அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?


 லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க