- பகல்ஹாமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்தியா
- நாடு முழுவதும் இன்று போர் பதற்ற கால ஒத்திகை ; தமிழ்நாட்டிலும் காலை முதல் தீவிர ஒத்திகை
- ஆபரேஷன் சிந்தூர் காரணமாக காஷ்மீர் விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது ராணுவம்
- பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 5வது ஆண்டு தொடக்க விழா; கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் - பாகிஸ்தான் பிரதமர்
- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை; செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை
- கோடையை தணிக்கும் விதமாக தொடர்ந்து மழை பெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- பட்டுக்கோட்டை பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி சரண்யா கொலையில் 2வது கணவர் கைது
- சங்கரன்கோயிலில் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து சார்பதிவாளர் மீது தாக்குதல்
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு.. போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
சுகுமாறன் | 07 May 2025 09:48 AM (IST)
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Published at: 07 May 2025 09:48 AM (IST)