Madurai: மதுரை கள்ளழகர் ஆடித்தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!


மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டி, தாங்கள் விளைவித்த நெல், உள்ளிட்ட பல்வேறு தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபடுவர் என்பது குறிப்பிடதக்கது. அழகர்கோயில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக தொடக்கம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் வகையில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


நாம போட்ட திட்டங்கள் அப்படி..! வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதல் இடம் - நிதி ஆயோக் அறிக்கையில் பாராட்டு


Niti Aayog On TN Govt: வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம் வகிப்பதாக, மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் அறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-24-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய நான்காவது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட,  இந்த 2023-24-ஆம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் சிவசங்கரன்


பிற மாநிலங்களில் ஆட்கள் ஏறி பேருந்துகள் நிறைந்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் வகையில் தமிழகத்தில் பேருந்துகள் அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.


ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு


ஒகேனக்கல்லில் நடைபெறும் மூன்று நாள் ஆடி பெருக்கு விழாவில், கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்க துறை அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும்-மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.


பழனியில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை துவக்கம்


பழனியில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவையை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.


Mettur Dam: தொடர்ந்து உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 71,777 கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 53,098 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது.