கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தர்ராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது ஐந்தாம் வகுப்புக்குள் இருக்கும் மாணவர்கள் மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் இடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.


இதில் மாணவர்கள் நீங்கள் ஏன் கவர்னராக வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பெற்றோர் சொன்னதால் மருத்துவம் படித்தேன். பின்னர் எனது ஆசைக்கு அரசியலுக்கு வந்து கவர்னர் ஆனேன் என்றார். வாழ்க்கையில் முன்னேறி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கவர்னர் ஆனேன். நன்றாக படித்தால் நாம் நினைக்கும் பொறுப்பில் வரலாம் என்றார்.


மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் நான் ஏன் அம்மா பேச்சைக் கேட்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அம்மா நல்லதை தான் சொல்வார் என அறிவுரை வழங்கினார். கவர்னராகவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நல்ல மனிதராக வாழ்ந்து இருப்பேன் என்றார். மேலும் ஒரு மாணவர் உங்களின் ரோல் மாடல் யார் என கேட்டதற்கு, அம்மா, அப்பா, டீச்சர் எனவும், தற்போது உள்ள ரோல் மாடல் பிரதமர் மோடி எனவும் அவர் பதிலளித்தார்.


இதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல பாரத பிரதமர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு நாம் பாடுபடுவோம்.
சிபிஎஸ்சி பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும். புதுச்சேரியை பொருத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி மலையாள பாட கல்வி ஆந்திர வழிபாட கல்வி என மூன்று விதமாக பாடக் கல்வி உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். நாராயணசாமி தமிழ் படிப்பதை தமிழிசை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.


நாராயணசாமியின் கருத்தை உறுதியாக மறுக்கிறேன். சமமான கல்விக்கு இந்த முடிவை எடுத்துள்ளோம். சிபிஎஸ்இ பற்றி அரசியல்வாதிகள் ஏதும் சொல்ல வேண்டாம். மூளை ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகளை நாம் மற்ற மொழியை படிக்க விடுவதில்லை.நாராயணசாமியின் அக்கரையை விட எங்களுக்கு அக்கறை உள்ளது.மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி கல்வி வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ளோம். பீஸ் கட்டவில்லை என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்படி எந்த ஆசிரியரும் நடந்து கொள்ளக் கூடாது. நாரயணசாமி காட்டமாக பேசும் பொழுது காட்டு காட்டு என்று காட்ட தான் செய்வார். நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியை கொண்டு வர முடியவில்லை. ஆகவே அவரது குற்றச்சாட்டை நான் புறம் தள்ளுகிறேன். மீபமாக அண்ணாமலையின் வாட்ச் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு, எல்லாத்தையும் நான் வாட்ச் பண்றேன் என நகைச்சுவையாக சொல்லி பேட்டியை முடித்து சென்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண