தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

12.04.2023 முதல் 16.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

12.04.2023 மற்றும் 13.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு  தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 - 3  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழை பதிவு எதுவுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒரு வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும் சேலம் – 38.8 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 38.6 டிகிரி செல்சியஸ், வேலூர் – 38.2 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் இயல்பை விட 0.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது. கோடை வெயில் தொடங்கிய முதல் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளனர்.

மனித குலத்திற்கு அவமான சின்னம்...சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

EPS: பிஞ்சுக் குழந்தைக்கு பாலியல் கொடூரம்; 13 மணிநேர தாமதம் ஏன்?- சொந்தக் கட்சி என்பதாலா?- ஈபிஎஸ் கேள்வி