பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நாளை முதல் வருகின்ற ஜனவரி 13 ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்,கோயம்பேடு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  மாதவரத்தில் இருந்து பொன்னேரி,கும்முடிப்பூண்டி,ஊத்துகோட்டை,ஆந்திரா செல்வோர் பயணம் செய்யலாம் என்றும், கே.கே.நகரில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி,கடலூர்,சிதம்பரம் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம்,தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமல, புதுச்சேரி,கடலூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து, தென் மாவட்டங்களான மதுரை,திண்டுக்கல்,இராமநாதபுரம்,தூத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 


முன்பதிவு வசதி :


முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.TA.stc.in, Dxgte official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை :


மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24c7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வகுல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Cantrol Room) 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (No 1| Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வழித்தட மாற்றம்:


முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கார் மற்றும் இதர வாகனங்கள்:


கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாதவரம் புதிய பேருந்து நிலையம் : 


ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள்,செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை வழியாக செல்கின்றனர்.


பூந்தமல்லி பேருந்து நிலையம் :


திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு வழியாக செல்ல இருக்கிறது.


புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு :


ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர் ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர். எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு பயணம் செய்யலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண