இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. மேலும் சில சமயங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களும், படகுகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.


கடல் கொள்ளையர்கள்:


இந்நிலையில், இன்று புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீனவர்கள், கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, 4 படகுகளில் திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள், காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் வலைகளையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.


கரை திரும்பிய மீனவர்கள் 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


எல்லை தாண்டி இலங்கை மீனவர்கள்:


இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.