குளித்தலை காவிரி ஆற்றில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஆற்றில் மூழ்கிய நபரை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மேலும் விசை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்த்தை பேரிடர் மீட்பு படை குழுவினர் மோட்டார் படகு மூலம் ஆற்றில் தத்தளித்த நபர்களை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் விளக்க ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் கோமதி, முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், குளித்தலை காவல் ஆய்வாளர் உதயக்குமார் மற்றும் பொது சுகாதார துறையினர் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.