Ramanathapuram: தேசிய அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவி - கல்வி அமைச்சர் பாராட்டு
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாணவி அ.பிருந்தா உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
Continues below advertisement

வீர் கதா போட்டியில் பரிசு பெறும் மாணவிகள்
Source : whats app
தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டதில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
வீர் கதா போட்டியில் அரசுப் பள்ளி மாணவி
வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி அ.பிருந்தாவுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து தெரிவித்தார். இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீர் கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து
இந்தாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் அய்யாத்துரை என்பவர் மகள் அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க.வளர்மதியின் வழிகாட்டுதலில் 'ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இம்மாணவிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து தெரிவித்து தொடர்ந்து இதுபோல் சாதனை புரியவும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IND Vs ENG 3rd T20: இந்தியா வசமாகுமா டி20 தொடர்? இங்கிலாந்திற்கு வாய்ப்பிருக்கா? ராஜ்கோட் மைதானம் இதுவரை எப்படி?
குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாணவி அ.பிருந்தா உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டதில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.