தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று நாகை மாவட்டம் நாகூருக்கு வந்தார். பின்னர் நாகூர் தர்கா சென்ற அமைச்சர் அங்கு ஆண்டவர் சமாதியில் சிறப்பு  பிரார்த்தனையில் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், கண்ணுக்கு எட்டிய வரையில் அம்மையார் ஜெயலலிதா, எதிரிகளே இல்லை என கூறினார். இன்றைய நிலைப்பாடு மக்களின் கண்ணுக்கு தெரிந்த வரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றார். தலைமறைவான ராஜேந்திர பாலாஜி மீது ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.



 


Yearender 2021: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் முதல் மழை நீர் பாதித்த பயிர்கள் வரை திருவாரூரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்


அவர் மீது அரசின் நடவடிக்கைகள் தொடரும். யார் நடமாட முடியாது என கொக்கரித்தார்களோ அவர்கள்தான் இன்று ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தவறு செய்த காரணத்தினால்தான், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவர் மீது நிச்சயம் நடவடிக்கை தொடரும். மேலும், 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வழங்கியதில் மோசடி செய்துள்ளார். ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்று கடுமையாக விமர்சித்தார். 





 


பழனி முருகன் கோயிலில் 2.36 கோடி உண்டியல் காணிக்கை - உண்டியல் எண்ணும் போது பணம் திருடிய கல்லூரி பணியாளர் கைது


கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக எப்படி வெற்றி பெற்றோமோ அதைவிட கூடுதலாக இம்முறை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதிபட கூறினார்.  மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய 5 வருட  கால திட்டங்களை, 5 மாத காலத்திலேயே முடித்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் பெருமையுடன் அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு பொங்கல் விற்பனைக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் நெய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு தொகுப்பு 21 பொருட்களில் 100 கிராம் நெய் இடம் பெறும் என்றும் கூறினார். 


காருண்யா பல்கலைக்கழகம் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதா என்பது குறித்து ஆய்வு - வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்