தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கும், கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழக உள்மாவட்டங்களில் பரவலாகவும், நாளை மறுநாள் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


வரும் 27-ந் தேதி வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.