கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 


விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 



Chopper Crash: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்: டிஎன்ஏ சோதனைக்கு தயாராகும் மருத்துவக் குழு!


பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. 


இந்தச் சூழலில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் மற்ற 11 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு கருகியுள்ளது.




இதன் காரணமாக இன்று டி.என்.ஏ பரிசோதனையை மருத்துவ குழு மேற்கொள்கிறது. அதன் பிறகு அவர்களது உடல்கள் சூலூர் கொண்டு வரப்பட்டு அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.


பிபின் ராவத் உடலும், அவரது மனைவி உடலும் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை தகனம் செய்யப்பட இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!


Bipin Rawat Demise: ‛3 நாட்கள் துக்கம்... அரசு விழாக்கள் ரத்து... மண்ணின் மைந்தனுக்கு உத்தர்காண்ட் மாநிலம் மரியாதை!


Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!