சென்னையில் இன்று சில இடங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் 2 மணிக்கு மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.  சொத்து பெரும்பேடு பகுதியில் கரணோடி பஜார், சண்முகம் நகர், தேவனாரி, பஸ்தாபாளையம், வி.ஜி.பி மேடு உள்ளிட்ட இடங்களிலும். பட்டாபிராமன் பகுதியில் ஐயப்பா நகர், மேல்பாக்கம், அருணாச்சலம் நகர், CTH நகர், பாரதியார் நகர், எம்.ஜி. சாலை, நேரு சாலை, சஞ்சீவி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணிவரை மின் இணைப்பு இருக்காது. 




அதேபோல ஆழ்வார்பேட்டை, புழல் மற்றும் ஆவடி செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணிவரை மின் இணைப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் அந்தந்த பகுதிகளுக்கு 2 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.