Periyar Quotes: ஈரோடு மாவட்டத்தில், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்த வெ. ராமசாமி எனும் சமூகநீதி நாயகன் தனது சமூக சீர்திருத்த பயணத்தில் கூறிய மிகவும் முக்கியமான பொன் மொழிகளை அவரது 144வது பிறந்த நாளான இன்று காணலாம். 


 


* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் கொதித்து எழாமல் இருக்க உண்டாக்கப்பட்ட சதியாகும்!


* யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும் உனது புத்தில்லும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!


* கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பறப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை!


* திருமணம் என்பது வயது வந்த, அறிவு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட கரியமே தவிர மற்ற யாருக்கும் வேறு எதற்கும் கட்டுப்பட்டதல்ல!


* எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரை பார்த்ததுகூட இல்லைங்க!


* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு!


 * உன் சாஸ்த்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது; அதை சிந்தி!


* பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணையமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்!


* கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!


* விதியை நம்பி மதியை இழக்காதே!


* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ, அதேபோல் தான் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே ஒழுக்கமாகும்!


* பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பதோடு, பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயும் இருக்கிறது!


*  முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான்  ஜனநாயகம்!


* ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்வதில்லை, ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தைக் கொல்வதில்லை ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்கிறான் எனவே மனிதன் தான் மிகவும் அபாயகரமானவன்!


* ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாட்டின் மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்! 


* தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்!


*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவருடன் போராடுவது கடினமான காரியம்! 


* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்!


* எந்த மனிதனும் எனக்கு மேலானவன் இல்லை, அதேபோல் எனக்கு கீழானவனும் இல்லை!


*  பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!


* நான்கு ஆண்கள், ஒரு பெண் இருக்கும் குடும்பத்தில், முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்!


* உன்னை யோசிக்க வைப்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல, நீ நீயாகவே இரு!


* மனிதன் பெண்ணை தன்னுடைய சொத்தாக நினைக்கிறனே தவிர, தன்னைப்போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிராக மதிப்பதில்லை!