நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பத்ம விருதுகள். நாட்டிற்காக மிகப்பெரிய சேவைகளை ஆற்றிய வீரர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்மஸ்ரீ விருதுகள்:


மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மறைந்த குழந்தை நல மருத்துவர் திலீப் மகலானபிசிற்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. 25 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் மக்கள் வாழும் குடியிருப்பில் புகும் கொடிய விஷப்பாம்புகளை பிடிக்கும் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


பாரம்பரிய மற்றும் நவீன முறைகள்:


நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர்.


மேலும், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள பாம்பு பிடி வீரர்களுக்கு ஆபத்தான பாம்புகளை எவ்வாறு பிடிப்பது என்றும் பயிற்சி வழங்கி வருகின்றனர். நமது முன்னோர்கள் பாம்பு பிடிப்பதற்கு பயன்படுத்திய வித்தைகளையும், நடைமுறைகளையும் இவர்கள் இந்த நவீனகாலத்தில் மற்றவர்களுக்கு கற்றுத்தந்து வருகின்றனர்.


அமெரிக்காவிலும் அசத்தல்:


இயற்கையுடன் இணைந்து வாழும் பாரம்பரிய மக்களான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றிருப்பது அந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பலரும் பாராட்டி வருகின்றனர்.




ஒரு முறை அமெரிக்காவின் ப்ளோரிடாவின் மாகாணத்தில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி கடந்த 2017ம் ஆண்டு பாம்புபிடிப்பதில் வல்லவர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை அணுகியுள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவிற்கு பறந்த இவர்கள் இருவரும் 10 நாட்களில் 14 பாம்புகளை பிடித்து அசத்தினர். இவர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த காரியங்களை செய்து வருகின்றனர்.


இவர்களது திறமையை பாராட்டிய ப்ளோரிடாவின் வன உயிரிகள் அமைச்சக தலைவரான கிறிஸ்டன் ஸ்டிவெர்ட் இவர்கள் இருவரும் அபரிமிதமான திறமைகளை கொண்டவர்கள் என்றும் பாராட்டியுள்ளனர்.  


மேலும் படிக்க: பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற 3 மாணவர்கள் காயம் - விழுப்புரம் அருகே பரபரப்பு


மேலும் படிக்க: Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை - உயிரைப் பறித்த உறவினர்கள்..! சினிமாவையே மிஞ்சிய பயங்கரம்..!