தமிழ்நாடு அரசின் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் இறப்புக் கருணைத் தொகையின் அதிகபட்ச வரம்பு 25% உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால் அரசு ஊழியர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


இந்த அறிவிப்பபை நிதித் துறை செயலாளர் திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். அதில், பணிக்கொடை தொகை 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதாவது 25% உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஓய்வூதிய பலன்களை அதிகப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


முதல்வர் அமெரிக்காவில் இருந்து நாளை தமிழ்நாடு திரும்பும் நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் வெளியிடுள்ளார்