கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிகளில் சில திருத்தங்களுடன் மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் அவசியம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை உள்ளிட்டவற்றுக்கான மாவட்டத்துக்குள்ளும் மாவட்டங்களுக்கிடையிலும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படுகிறது.வருகின்ற 17-ஆம் தேதி காலை  6 மணிமுதல் இது அமலுக்கு வர இருக்கிறது. இதையடுத்து மாவட்டங்களுக்கிடையிலும் இ-பாஸ் கட்டாயமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


உண்மை என்ன? 



மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் இ-பாஸுக்காகப் பதிவு செய்வது(Registration)மட்டும் கட்டாயமாக்கப்படுகிறது. பாஸ் வாங்கிய பிறகுதான் பயணிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

இ-பாஸ் தேவைப்படுபவர்கள் பதிவு செய்ய அரசின் https://eregister.tnega.org/#/user/pass என்கிற தளத்தைக் க்ளிக் செய்யவும்.