கொரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாடு மீண்டுவர மக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றிட அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒன்று கூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். பெறப்படும் நன்கொடை - மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 




முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவது எப்படி?

வங்கி இணைய சேவை, கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக செலுத்திட: https://ereceipt.tn.gov.in/cmprf/Cmprf


PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik போன்ற செயலிகள்:
UPI-VPA ID: tncmprf@iob


Electronic Clearing System (ECS) / RTGS / NEFT;


வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி


கிளை : தலைமைச் செயலகம், சென்னை - 600 009.


சேமிப்புக் கணக்கு எண்: 117201000000070


IFSC: IOBA0001172


MICR Code : 600020061


CMPRF PAN : AAAGC0038F


பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை,


தேதி, நிதி அனுப்பியதற்கான எண். தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி / அலைபேசி எண்.


குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:


அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
முதலமைச்சர் பொது நிவாரண நிதி,


நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை 600 009, தமிழ்நாடு


மின்னஞ்சல் முகவரி: jscmprf@tn.gov.in


Corporate Social Responsibility-ன் கீழ் நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கீழ்காணும் வங்கிக்கணக்கில் செலுத்தலாம்:


வங்கி பெயர் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கிளை : தலைமைச் செயலகம்.
சென்னை: 600 009
சேமிப்புக் கணக்கு எண் : 117201000017908


IFSC : IOBA0001172.


வெளிநாடுவாழ் மக்கள் பயன்படுத்த வேண்டிய SWIFT code: IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai,


நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(எ)-ன்கீழ் 100% வரிவிலக்கு உண்டு.அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.