பேருந்தில் அடுத்த நிறுத்தத்தை ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். முதலாவதாக இந்த திட்டம் சென்னையில் உள்ள 150 பேருந்துகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நிறுத்தம் வருவதற்கு 300 மீட்டர்களுக்கு முன்னதாக ஒலிபெருக்கி மூலம் நிறுத்தத்தின் பெயர் ஒலிக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.