மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,37,898 இலட்சம் மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.


 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.2,37,898 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம்  மனுக்கள் பெறப்பட்டது. 622  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 59  மனுக்கள் பெறப்பட்டது.


 


 


 


 






 


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.


அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 நபருக்கு தலா ரூ.4999 மதிப்பீட்டில் ரூ. 9,998 காதொலிக்கருவிகளையும், 1 நபருக்கு ரூ 26,800 மதிப்பீட்டில் செயற்கை கால்,  1 நபருக்கு ரூ.1,85,300 மதிப்பில் செயற்கை கால்,  2 நபருக்கு ரூ.15,800 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 1 நபருக்கு புத்தக பையினையும்,  சிறுசேமிப்புத்துறை சார்பில் உலக சிக்கன நாள் முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சிறுசேமிப்பு குறித்த சொற்தொடர்கள் போட்டி, பேச்சு போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களும் என மொத்தம் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ. ரூ.2,37,898 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.




இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கூட்டுறவுத்துறை மண்டலஇணை பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.