கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 15, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:

மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம்.

Continues below advertisement

கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், தென்னிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர். ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல். சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.