கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பள்ளியறை பூஜையின் போது அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 




 


கரூர் மாநகரின் மையம் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த பிறகு கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜையின் போது தீபாரதனைக்கு பிறகு பக்தர்கள் தீபாரதனை தட்டை எடுத்துச் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் முழுமையாக காண்பிக்கப்படுவதற்கு முன்பாகவே பள்ளியறை நுழைவு வாயிலில் திரை சீலையால் அர்ச்சகர்கள் மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள்,


 


 


 




பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு திரைச் சீலையை போடலாமே என கூறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அதனை தொடர்ந்து தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் பள்ளியறை கதவுகளை பூட்டி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கோவில் செயல் அலுவலரிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ள நிலையில், அவர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண