கரூர் காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது .


 


 




மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானி சாகர் அமராவதி அணை மற்றும் நொய்யல் ஆறுகளில் இருந்து காவிரி யாற்றில் கலக்கும் தண்ணீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது .


இதனால் கரூர் அருகே மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு, 924 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி, வினாடிக்கு, 2,219 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீ ர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு கிளை வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது .


 


 




 


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நிலவரப்படி வினாடிக்கு, 47 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 300 கன அடியில் இருந்தது 250 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 63. 49 அடியாக இருந்தது .


 




 


க. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் நொய்யல் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 26. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 15.35   அடியாக இருந்தது.