மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு. ரூ.2.91 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.


 


 




 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ2.91 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 587   மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 57  மனுக்கள் பெறப்பட்டது.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார். 




அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 நபருக்கு காதொலிக்கருவி, சக்கர  நாற்காலி,  பார்வையற்றோருக்கான கண்ணாடி மற்றும் ஊன்றுகோலும், உட்பட ரூ.21447 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பில் மொத்தம் ரூ.1.20 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும், கூட்டுறவுத்துறை சார்பாக மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.50000 மதிப்பில் மொத்தம் ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான வெள்ளாடு வளர்ப்பு கடனும் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ291,447 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள்.


 




இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கூட்டுறவு சங்ககளின் இணைபதிவாளர் கந்தராஜா, திட்ட இயக்குநர் சீனிவாசன்(மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.