கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை தொடர்ந்து ரத்து செய்து வரும் மாநகராட்சி. வருமான வரித்துறை சோதனையால் ரத்தா? கிசுகிசு-க்கும் கரூர் மக்கள்.




கரூர் மாநகராட்சி மாவட்ட கூட்டம் 26 ஆம் தேதி காலையில் நடைபெறும் என்று அதற்கு இன்றைய தினம் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலருக்கும் அறிவிப்பு வெளியிட்டு நடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில்,26 ஆம் தேதி காலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்கர் அசோக் குமார் மற்றும் துணை மேயர் சரவணன் உள்ளிட்ட உறவினர்கள் ஆதரவாளர்கள்  இடங்களில் வருமான வரித்துறை சோதனை காலையில் தொடங்க ஆரம்பித்தது.


 


இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற தொடங்க இருந்த சோதனை தெரிந்ததும் மாமன்ற கூட்டத்தை ரத்து செய்து மேயர் கவிதா கணேசன் உடன் ஒரு சில திமுக மாமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.


பின்னர் அப்பகுதியில் அதிகாரிகளை சோதனை நடத்த விடமால் தடுத்தனர். ஐடி அதிகாரி காயத்ரி தேவி உட்பட அதிகாரிகளை வெளியேற்றி வாக்குவாதத்தில் ஈடுப்படும் போது சம்பவ இடத்தில் மேயர் கவிதா கணேசன் அங்கு இருந்தனர்.


 


 




 


 


அதே போல் துணை மேயர் தாரணி சரவணனின் இடங்களிலும் சோதனை தொடங்கியது. ஐடி சோதனை பல்வேறு இடங்களில் விரிவா விரிவாக்கம் செய்யப்பட்டது. நிலையில் மாமன்ற கூட்டம் 26-ம் தேதி நடைபெற்ற இந்த கூட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டு பின்னர் 29ஆம் தேதி மீண்டும் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நீண்டு கொண்டே இருந்தது.


மின் துறை அமைச்சர் சகோதர் வீடு மற்றும் ஆதரவாளர்கள் இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது  வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கப்பட்ட சம்பவம் வழக்கு பதிவு செய்யப்பட்ட கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்நிலையில் 29ஆம் தேதி மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் அறிவிப்பு ஒன்று வெளியாகி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது,ஜூன் இரண்டாம் தேதி மீண்டும் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் என்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 


 




 


இதற்கு முன்பு தேதி குறிப்பிட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இனி நடக்க இருக்கும் மாமன்ற கூட்டம் எப்பொழுது என்று தெரியாத நிலையில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நடைபெறும் மாமன்ற கூட்டம் பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். தொடர் வருமானவரி சோதனையால் மாமன்ற கூட்டம் நடத்தப்படாமல் இருக்கிறது என்று கரூர் மக்கள் கிசுகிசுக்கின்றனர்.