கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி வழக்கில் மாணவியின் தாய் ஏ1 குற்றவாளியாகவும் 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மாணவியின் தாய் ஏ1 குற்றவாளியாகவும் 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கனியாமூர் தனியார் பள்ளி  மாணவி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக cbcid சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 7ம் தேதி  விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி  மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பள்ளி உடமைகள் வாகனகள் திருடப்பட்டும், காவல்துறை வாகனங்களை தீவைத்து எரித்தும், சேதப்படுத்தியும், கால்நடைகளையும் திருடிச் சென்றனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு போன்றவற்றை நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தக் கலவர வழக்கை CBCID சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. 500க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீதும் என மொத்தம் 916 பேர் மீது, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை CBCID சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 666 பேர் மீது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும், 53 இளம் சிறார்களுக்கு எதிராக, சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும்

 மேலும் காவல்துறை பாதுகாப்பிற்காக, சேலத்தில் இருந்து வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற வழக்கில் 5 பேர் மீதும், 124 பேருக்கு எதிராக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை மிக விரைவில் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவியின் தாய் ஏ1 குற்றவாளி - 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி

மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி எனவும், 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தையை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இதுபோன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு அதிகமாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக ஏடுகள் இல்லை என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola