பெண்ணுரிமைக்கு ஓயாமல் உழைத்த திராவிட முன்னோடிகள் வழியில் தொடர்வோம்; பிடிஆர் பெண்கள் தின வாழ்த்து

பெண்ணுரிமைக்கு ஓயாமல் உழைத்த திராவிட முன்னோடிகள் வழியில் தொடர்வோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

பெண்ணுரிமைக்கு ஓயாமல் உழைத்த திராவிட முன்னோடிகள் வழியில் தொடர்வோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி ’டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" ஆகும். பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் (CSW-67) வரவிருக்கும் 67வது அமர்வுக்கான முன்னுரிமைக் கருப்பொருளுடன் இந்தத் தீம் சீரமைக்கப்பட்டுள்ளது.

இது “புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றம், பாலின சமத்துவத்தை அடைவதற்கான டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கிறது. பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனை இந்த தீம் அங்கீகரிக்கிறது.

மகளிர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்

சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதே இந்நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். இதனுடன், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் உரிமைகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும். இதனுடன், எந்தவொரு துறையிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுக்கும் நோக்கத்திற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில், பெண்களின் உரிமைகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண்கள் தினத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் அமைச்சர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பெண்ணுரிமைக்கு ஓயாமல் உழைத்த திராவிட முன்னோடிகள் வழியில் தொடர்வோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்து இருப்பதாவது:

சமத்துவம் மிக்க வருங்காலத்தை உருவாக்கிடப் பெண்களின் எழுச்சி இன்றியமையாதது. பெண்ணுரிமைக்கு ஓயாது உழைத்த நம் திராவிட இயக்க முன்னோடிகளின் வழியில் நாமும் தொடர்வோம். புத்துலகம் படைத்திட இயங்கிவரும் தமிழக, இந்திய பெண்களுக்கு  எனது உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola