நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. தமிழ்நாட்டிலும் சிறப்பான கொண்டாட்ட ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தன.


இந்நிலையில் இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அத்துடன் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார். அதில், “ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். எண்ணற்ற தியாகிகளின் பங்களிப்பால் நாம் சுதந்திரத்தை கொண்டாடி வருகிறோம். நாட்டு விடுதலைக்கு மற்றும் சமூதாய விடுதலைக்கு போராடிய அண்ணா, மத வெரியர்களால் தேச பிதா காந்தி அடிகள் சுட்டி கொலை செய்யப்பட்ட இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார். அதை நான் இன்று நிணைவு கூர்கிறேன்.


 






1947ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பண்டிதர் நேரு ஒரு சிறப்பு மிக்க உரையை ஆற்றினார். அப்போது தான் இந்த மூவர்ண கொடி தேசிய கொடியாக மாறியது. விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணி தான் கொடுத்தார். மூவர்ண கொடியின் முன் அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.


ஏனென்றால் இந்திய துணை கண்டத்தில் முதல் முறையாக சுதந்திர முழக்கத்தை எழுப்பியது தமிழ்நாடு தான். அடிமைப்படுத்தல் தொடங்கிய நாள் முதல் அதை எதிர்த்து போராட தொடங்கியது தமிழ் மண். இதன்காரணமாகவே இங்கு தமிழனாக தேசிய கொடியை ஏற்றும் போது மிகுந்த உணர்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் தன்னுடைய உரையில், பூலித்தேவர், மருதநாயகம், கட்டபொம்மன், சுந்தரலிங்கம்,வடிவு, வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி,மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை, தளபதி பொல்லான், திப்பு சுல்தான், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார், திரு.வி.க,பெரியார்,செண்பகராமன், வீரவாஞ்சிநாதன், அழகுமுத்துக்கோன், நாமக்கல் கவிஞர், சிங்காரவேலர் ,தோழர் ஜீவா, காமராஜர், ஜே.சி.குமரப்பா, இரட்டை மலை சீனிவாசன், காகிதமில்லத், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜமத்கனி, ராஜாஜி, திருப்பூர் குமரன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடு என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.




மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண