Dams water level: மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பிரபாகரன் வீரமலை | 24 May 2023 04:28 PM (IST)
கேரளா மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அணையில் இருந்து தண்ணீரை பார்க்கும் மக்கள்
மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
அமராவதி அணைக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது கேரளா மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை அமராவதி அணைக்கு வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி அலாரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 183 கனஅடியாக அதிகரித்தது. அமராவதி புதிய பாசனவாய் காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 62.77 அடியாக இருந்தது . அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாயனூர் கதவணை.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 733 கன அடி தண்ணீர் வந்தது காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1940 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக நிறுத்தப்பட்டது.
நங்காஞ்சி அணை நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நான்காம்ஜி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.67 அடியாக உள்ளது. நாங்க ஆட்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை 26 புள்ளி 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 13.05 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சபட்டியில் 25 மில்லி மீட்டர் மழை பெய்தது.