தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


தர்மபுரி, தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்), கொடுமுடி (ஈரோடு மாவட்டம்), சேலம் (சேலம் மாவட்டம்) தலா 9, குடிமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி மாவட்டம்), தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7, மருங்காபுரி (திருச்சி மாவட்டம்), தென்பரநாடு (திருச்சி மாவட்டம்), திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்), தரமபுரி (தருமபுரி மாவட்டம்), வத்தளை அணைக்கட் (திருச்சி மாவட்டம்), அடையாமடை (கன்னியாகுமரி மாவட்டம்), பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) தலா 6, கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்), ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்), நம்பியூர் (ஈரோடு மாவட்டம்), ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்), பாப்பாரப்பட்டி (மணப்பாறை மாவட்டம்), திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்), சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம்), துறையூர் (திருச்சி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


 02.09.2023: தெற்கு  இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.