மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திர நாத் மகன் அருண் கைது செய்யப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் போதைப்பொருள் கடத்தல்,விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை செயல்பட்டு வருகிறது. 


இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியாப்வின் ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருன் ஆகியோர் கைது செயய்ப்பட்டனர். அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன், பண்ம், செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 


இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அருண் என்பவர் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திரநாத் மகன் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.